மெயிலில் வந்ததுதான். இதிலிருக்கும் க்ரியேடிவிடியை மிக மிக ரசித்தேன்!
இறுதியாக..
எல்லாரும் ஓடி வாங்க.....
புதுகைத் தென்றல் ஒரு தொடர் பதிவுக்கு என்னை எழுதச் சொல்லி கூப்பிட்டிருக்காங்க. அதை அப்புறமா எழுதறேன்.
அதுக்கு முன்னாடி, இனி தொடர் பதிவு எழுதவோ, அதுக்கு வேற யாரையும் கூப்பிடவோ வேண்டாம்-ன்னு கேட்டுக்கலாம்னு இருக்கேன். மூளை செத்துப் போகுது. பத்து நாளா எதுவுமே யோசிக்க முடியலை. மண்டை காயுது.. எனக்கே இப்படி இருக்குன்னா, என்னை படிக்கறவங்க எவ்ளோ மண்டை காஞ்சு போயிருப்பாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.
அதுனால் இனி கொஞ்ச நாளைக்கு தொடர் விளையாட்டு வேண்டாம்.
இதை வழிமொழியறவங்க... இந்தப் பதிவை அப்படியே COPY PASTE பண்ணி, புதுசா 25 பேரைக் கூப்பிடணும். நான் கூப்ட்ட ஆளுக யாரையும் திரும்பக் கூப்பிடக் கூடாது.
நான் கூப்பிடறவங்க...
லக்கிலுக்
அதிஷா
வெண்பூ
அப்துல்லா
நர்சிம்
ஜ்யோவ்ராம் சுந்தர்
நந்து f/o நிலா
வடகரைவேலன்
லதானந்த்
வெயிலான்
சஞ்சய் (எ) பொடியன்
குசும்பன்
ராப்
மங்களூர் சிவா
நிஜமா நல்லவன்
நாமக்கல் சிபி
கார்க்கி
ஈரவெங்காயம் சாமிநாதன்
செந்தழல் ரவி
கோவி.கண்ணன்
கிரி
விஜய் ஆனந்த்
ஜோசப் பால்ராஜ்
கூடுதுறை
யெஸ். பாலபாரதி
டாக்டர்.ப்ரூனோ
முரளிகண்ணன்
வால்பையன்
ரமேஷ்வைத்யா
செல்வேந்திரன்
ச்சின்னப்பையன்
தாமிரா
சிம்பா
யட்சன்
முத்துலட்சுமி கயல்விழி
கயல்விழி
புதுகைத்தென்றல்
ராமலெட்சுமி
துளசிடீச்சர்
விக்னேஸ்வரன்
மைஃப்ரண்ட்
ஜிம்ஷா
அனுஜன்யா
ஆயில்யன்
தமிழன் (கறுப்பி)
தமிழ்பிரியன்
மகேஷ் (துக்ளக்)
வேளராசி
ப்ளீச்சிங் பவுடர்
சந்தனமுல்லை
தூயா
ரமேஷ்
திவ்யா
ப்ரியா
ஓவியா
.
.
.
.
.
.
.
போதுமா...?
என்னமோ பண்ணுங்க....
Labels: தொடர் கொடுமை , நக்கல் , நையாண்டி , மொக்கை
காணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்
அந்த டைரியை நான் நான்கு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்.. 2005-ம் வருட டைரி என்று ஞாபகம்..
கடந்த வியாழக்கிழமை அதை நான் புத்தக பீரோவில் தேடிக்கொண்டிருந்த போது என் மகள் மீரா வந்து "என்னப்பா நாலு நாளா கிடந்து தேடிகிட்டிருக்கீங்க?" என்று கேட்டாள். ஐந்திலிருந்து ஆறாவது போய்விட்டாள்.. என்னைப் போலவே புகழ் பெற்ற நிருபராகும் ஆசை அவளுக்கு இருக்கிறது.(புளித்துப் போன இந்த காமெடிக்கு மன்னிக்கவும்.. நானும் புகழ் பெற்ற நிருபனாகும் ஆசையோடு இருந்தேன்) நான்கு நாளாக நான் டைரி தேடுவதை கவனித்திருக்கிறாள்..
"பழைய டைரி ஒண்ண தேடிட்டிருக்கேன் மீரா.."
"எதுக்குப்பா?"
நான் இந்த வலைப் பக்கத்தைப் பற்றி அவளுக்குச் சொன்னேன்.. "நாம என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்.. இதுக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. விகடன்ல கூட வாராவாரம் ஒரு வலைப்பூ பத்தி எழுதறாங்க"
"சரிப்பா.. அதுக்கும், நீங்க டைரி தேடறதுக்கும் என்னப்பா சம்பந்தம்?"
"நானும் அந்த மாதிரி ஒரு blog ஆரம்பிச்சிருக்கேன். அந்த 2005-ம் வருட டைரில சில கவிதைகள், கதைக் கருக்கள் எழுதி வெச்சிருந்தேன். அதை என்னோட blog-ல போடலாம்னுதான் தேடறேன்"
நான் இதை சொன்னதிலிருந்து அவளும் என்னோடு தேட ஆரம்பித்தாள். ஆனால் டைரி கிடைத்தபாடில்லை.
"அப்பா.. அம்மாகிட்ட கேட்டுப்பாக்கலாம்பா.. அதுல அம்மா வீட்டுக்கணக்கெல்லாம் எழுதிட்டிருந்ததா ஞாபகம்"
இருக்கலாம். என் மனைவிக்கு வீட்டை ஒழுங்குபடுத்தி வைப்பதில் ஆர்வம் அதிகம். அப்படி ஒழுங்குபடுத்தும் போது எங்காவது எடுத்து வைத்திருக்கலாம்.
மனைவியை அழைத்துக் கேட்டேன்..
"நீங்க வருஷத்துக்கு நாலஞ்சு டைரி கொன்டு வரீங்க.. எது-ன்னு யாருக்கு தெரியும்?"
"2005-ன்னு நேராவும், தலைகீழாவும் ப்ரிண்ட் பண்ணீருப்பாங்க"
"என்ன கலர்?"
"சாம்பல் நிறம் மாதிரி இருக்கும்"
என் மகள் மீரா இடைமறித்துச் சொன்னாள்.. "நீ கூட அதுல கணக்கெல்லாம் போடுவம்மா.. போன தடவை என் ஸ்கூல் ஃபீஸ் எவ்ளோன்னு அதுலதான் பாத்துச் சொன்ன.." - சொல்லிவிட்டு ‘எப்படி?’ என்பது போல என்னை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்.. நான் பாராட்டும் விதமாக அவள் தோளில் தட்டிக்கொடுத்தேன்.
"ஓ.. அது உங்க ஃப்ரண்ட் உசேன் ப்ரசண்ட் பண்ணின டைரிதானே?" - மனைவி கேட்டபோது புல்லரித்துப் போனது எனக்கு.. ‘ஆஹா.. எவ்வளவு ஞாபகசக்தி இவளுக்கு..! இவளை மனைவியாய் அடைய நான் குடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று நினைத்தவாறே Feelings of India-வுக்கு பிரேக் விட்டுவிட்டு "ஆமா..ஆமா.. அதேதான்.." என்றேன் உற்சாகமாய்.
"இருங்க வரேன்" என்று உள்ளே போனாள். நானும் என் மகளும் சந்தோஷமாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டோம்.
சிறிது நேரம் கழித்து வ்ந்த மனைவியின் கையில் கக்கூஸ் டப்பா இருந்தது! "ஏய்.. அதை எதுக்கு கையில தூக்கிட்டு வர்ற?"
"இல்லீங்க.. போன சண்டே பிளாஸ்டிக்காரனுக்கு பேப்பர், புக் எல்லாம் போட்டு டாய்லெட்டுக்கு பக்கெட் வாங்கினேன்ல?"
"ஆமா.. அவன் வந்தப்ப தான் நான் சலூனுக்கு கிளம்பிட்டிருந்தேன்.." சொல்லும்போதே எனக்கு வயிற்றை கலக்கியது..
"கரெக்ட்.. எல்லாத்தையும் போட்டுட்டு பக்கெட் வாங்கினேனா.. கூட மேட்சிங்கா இந்த டப்பாவையும் கேட்டதுக்கு இன்னும் எதாவது புக்ஸ் போடுங்கம்மா’ன்னான்.. அதான் பரண்ல இருந்த சில புக்ஸ போட்டேன்.
அந்த டைரி அது கூடத்தான் இருந்தது"
எனக்கு சினிமாவில் கிராபிக்ஸில் முகம் நான்கைந்தாக பிளக்குமே.. அப்படி ஆனது!
பீர்பாட்டில் திறக்கிறேன்....
வால்பையன் மன்னிக்கவும்!
எனக்கு பீர் அறிமுகமானது நண்பனின் செந்தூர் ஒயின்ஸ் மூலமாக. அதன் பிறகு சில நாட்கள் பிறர் பீரடிப்பதைப் பார்க்க மட்டுமே செய்தேன். பதினொன்ணு, பனிரெண்டு வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாள் (மப்பில் தேதி,கிழமை மறந்துவிட்டது) நானும் ஒரு பீரடிக்க ஆரம்பித்தேன். அதுவும் தற்செயலாகவே கிங்ஃபிஷ்ராக அமைந்துவிட்டது. சில ஊறுகாய், மிக்சருடன் ஆரம்பித்த எனது பீர் இப்போது பல ஆயிரங்களைக் கடந்துவிட்டது.
ஆனால் சில நாட்களாக இத்தோடு பீரடிப்பதை விட்டே ஓடிப்போய் விடலாமா என்று என்னும் அளவுக்கு மனஉளைச்சல். நான் ஏதோ விளையாட்டுக்கு ஸ்ட்ராங் அடிக்கப் போய் பன்முனை தாக்குதலில் மாட்டி கொண்ட மான் போல ஆகிவிட்டேன். நான் செய்த தவறு டூப்ளிகேட் சரக்கு விற்ற டாஸ்மாக் சூபர்வைசரைப் பகைத்துக் கொண்டது.
சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பீருக்கு வரிசையாக பத்து ஊறுகாய் கொடுக்கக் சொன்னார் அந்த டாஸ்மாக் சூபர்வைசர். சால்னாக்கடைக்காரரும் கொடுத்தார். அதில் ஒன்று மட்டுமே சாப்பிட்டேன். மற்றவை எல்லாம் திருப்பிக் கொடுத்தேன். பக்கத்திலேயே அவர் இருந்தாலும், நான் மப்பில் இருந்ததால்... சரியாகத் தெரியாமல் அவரது அலைபேசிக்கு அழைத்து கேட்டேன். அவ்வளவு ஊறுகாய்கள் தேவையில்லாதது அதனால் ஒன்றை மட்டும் சாப்பிட்டேன் என்று நானே கூறினேன். அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதெல்லாம் அவருக்கு ஊறுகாய் திருப்பிக் கொடுப்பது பிடிக்காது என்று நினைத்தேன். அவருக்கு என்னையவே பிடிக்காது என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.
கடைசியாக சாப்பிட்ட டூப்ளிகேட் பீரில் நான் ஏதும் மிக்ஸ் செய்யவில்லை. டாஸ்மாக் சூபர்வைசரின் அந்த சதியின்போது , பீரடித்து இறுதியாக "இந்த பீருக்கு நீங்கள் செவன் அப் மிக்ஸ் பண்ணி என்னை பெரியாளாக்க வேண்டாம், அதை உங்கள் சால்னாக்காரர்கள் பார்த்து கொள்வார்கள்" என்று ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தேன். 'போடாங்கொய்யால... ம**” என்று திட்டிவிட்டார். மப்பில் சூடு சொரணை இருக்குமா என்ன? நானும் பின்விளைவாக "என்னடா சூபர்வைசரிடமிருந்து இன்னும் பதிலில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது" என்றும் எழுதியிருந்தேன்.
அதை அவர் கண்டுகொள்ளவில்லை. நான் எப்பொழுது பீரடித்தாலும் எனக்கு மப்பு அவ்வளவாய் ஏறாது. இருந்தாலும் ஒரு பீரடித்து ஏறவில்லை என்றால் அதன்பின் இன்னொரு பீர் என் டேபிளுக்கு வருவது போல் ஆர்டர் செய்து விடுவேன். அப்போதும் அதைத் தான் செய்திருந்தேன், மற்ற டேபிளுக்கு பீர் வந்ததால், என் டேபிளுக்கு பீர் தருவீர்களா என்று கூட கேட்டிருந்தேன்.
அதற்கு பதில் அவர் வித்தியாசமாய் கொடுத்ததால் அங்கே செய்யும் விவாதத்திற்கு பதிலாக நானே ஒரு பீர் எடுக்க வேண்டியதாயிற்று. சமீபத்தில் மப்படித்த போது, சவுண்டு சந்திரனும் மஜாவேந்திரனும் பாரிலேயே ப்ளாட் ஆனபோதுகூட டாஸ்மாக் சூபர்வைசர் எழுப்பிவிடப் போனபோது நானும் கைகொடுத்து தூக்கிவிட்டு ஒரே ஒரு ஸ்மைல் மட்டும் காட்டினேன். சூபர்வைசர் எனது ஸ்மைலிற்கு திரும்ப சிரிக்கக்கூட இல்லை. ஆனால் அதன் பின் அவர் சிரித்தால் எனக்குத் தெரியும் வண்ணம் திரும்பி உட்கார்ந்தேன். முகத்தில் அவர் சிரிக்காமல் என் பின்னால் போய் முதுகில் சிரித்தது தெரிந்தது.
நான் என்ன துரோகம் அவருக்கு செய்தேன். நான் பீரடிக்கும் பாரில் எல்லாம் எனக்கு ஊறுகாய் தரக்கூடாதெனவும், நான் மப்பில் உளறுபவன், பீருக்கு காசுதராமல் போவேன் எனவும் ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது, எனக்கு வேறு பெயரில் சொந்தமாகவே ஒரு பார் இருப்பதாகவும் சொல்லி வருகிறார்கள்.
அது போல் நான் செய்வதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். என் பீருக்கு நான் காசு கொடுக்காமல், கொடுக்க முடியாமல் முகத்தை மறைத்து சொல்லும் அளவுக்கு கடங்காரன் அல்ல நான்.
இவர்களுக்கு நான் எப்படி தான் நம்ப வைப்பது. எனக்கு கோட்டர் கோயிந்தசாமி மீது நம்பிக்கை இல்லை. ஆனால் மப்பு என்ற வார்த்தை போதையுடன் இணைந்துள்ளது என்று நம்புகிறேன். (ரெண்டும் ஒண்ணுதாண்டா வென்ரு!) நான் வாழ்க்கையில் அடித்த ஒரே ஹா(ர்)ட் சிக்னேச்சர்மீது ஆணையாக நான் காசுகொடுக்காமல் போனதில்லை, போவதில்லை, போகப்போவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.
இந்த வீணாய் போன பார் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் நல்ல சால்னாக்களை என்று சொல்லி வந்தேன், ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு சூபர்வைசர், நான் தான் மப்படித்து உளறுவேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.
எனக்கு கிங்ஃபிஷர் பீர் தவிர வேறொரு பீரும் பிடிக்கும். அதுவும் இதே பாரில்தான் அடித்திருக்கிறேன். எனது போதை நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன். பக்கத்துக் கடைகளிலிருந்து சில முக்கியமான சைட் டிஷ்களைத் சேர்த்து அப்போது அடிப்பேன். இதற்காக நான் கடைக்காரனுக்கு பணம் கொடுப்பதால் அந்த பணத்திற்குண்டான மரியாதையின் பொருட்டு அந்த பீரை முழுக்க முழுக்க நானே குடிக்கும் வழக்கம் வைத்திருக்கிறேன். இது தவிர நான் வேறு சரக்கெதுவும் அடிப்பதில்லை.
பொதுவாக நான் எந்த பாருக்கும் ஆதரவாளன் இல்லை. மப்படித்துவிட்டு உளறுவதும் எனக்கு பிடிக்காது, ஆனால் டாஸ்மாக் பார் சூபர்வைசர்களின் போதை உளறல்கள் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில சூபர்வைசர்களால் நான் சால்னாக்கடைக்கார நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு. நான் பீரடித்து எந்த புரட்சியையும் செய்து வி்ட போவதில்லை, சர்ச்சைக்குரிய பார்களில் எனக்கு சைட் டிஷ் கொடுத்து எனக்கு யாரும் போதையேற்றப் போவதில்லை. எனக்கு காசு செலவாவதே மிச்சமாகிறது.
இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். நானே பார்ட்டி என்ற பெயரில் அரைமப்பு ஆறுமுகம் சார், நண்பர் மட்டை மனோகரனின் உளறல்களை கிண்டலடித்து நானும் மட்டையாகும் நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கிறேன். அதே போல் வேறு பார் ஏதாவதிலும் கச்சேரி நடந்திருக்கலாம்.
வேறு இடத்தில் நான் அப்படியேதேனும் மப்பில் உளறியிருந்தால் என்னை மன்னித்து, நான் உளறக்கூற முடியாத அளவுக்கு ஃபுல்மட்டையாக இன்னொரு பீர் எனக்கு ஆர்டர் செய்துவிட்டு, காசையும் செட்டில் செய்து விடுங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன்.
இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு பீர் ஆர்டர் செய்யப்போகும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் எனது (எத்தனையாவது என்று தெரியவில்லை) பீர் முடிந்தது.
யோவ்... அடுத்த பீர் கொண்டுவாய்யா.....ங்கொய்யாஆஆஆஆஅல!
(முக்கியக் குறிப்பு: வால்பையனிடம் முன் அனுமதி பெறப்பட்ட எதிர்பதிவு. இதைப்படித்து கும்மி, மொக்கையே சரணம் என்று திருந்தி வருமாறு வால்பையனுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது!)
அந்த இளிச்சவாயனின் பெயர்....

அந்த இளிச்சவாயனின் பெயர் வட்டிக்கு கடன் குடுத்த சுடர்மணி. அவனின் வசீகரமே அவன் பர்ஸ்தான். மற்ற கடன்காரன்களின் பர்ஸ்களின் அடர்த்தி இவன் பர்ஸின் ஒரு பிரிவுக்கு சமமாக இருக்கும். அத்தனை மொத்தமான பர்ஸ் அவன் பேண்ட் பாக்கெட்டை மீறி துருத்தி நிற்கும். அவன் கொஞ்சம் குள்ளமான உருவம். நிறம் என்று பார்த்தால் மாநிறம் தான். அவன் சிகப்பாக இருந்திருந்தால் என்ன, கருப்பாக இருந்திருந்தால் என்ன.. எதுவுமே அத்தனை நன்றாக இருந்திருக்காது, அவனிடம் பர்ஸ் இல்லையென்றால். நாசமாய்ப் போன ஒரு முகம். எப்போதுமே ஒரு தடித்த கெட்ட வார்த்தையை உதிர்த்துக் கொண்டிருக்கும் உதடுகள். கையிலுள்ள பை, அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த பச்சை நிற நோட்டுக்கள் கிட்ட தட்ட காசில்லாமல் திரியும் ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.
என் வீட்டுக்கு எதிர் வீடு அவன் உறவினர் வீடு. அவன் வீடு எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ தள்ளி இருந்தது. ஒரு லட்சம் வரை கடன் கொடுத்துவிட்டு, சீட்டுக் கம்பெனி நடத்திவிட்டு அங்கே போலீஸ் தேட உறவினர் வீட்டுக்கு வந்து விட்டான். ஒரு காலை நேரத்தில் அவனின் உடமைகள் அடங்கிய ஒரு ஒயர் கூடையோடு அவனின் மனைவி அழைத்து வந்த போது தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அந்த வினாடியை இந்த நிமிடம் வரை என்னால் மறக்க முடியவில்லை. ஒரு கடன்காரன் வந்துவிட்டான். செலவுக்கு காசில்லாமல் வேறு அல்லாடிக் கொண்டிருந்தேன் நான். அவனிடம் கடன் கேட்கவென்றே நான் எதிர்வீட்டுக்குச் சென்றேன். அவனைக் கவர எத்தனை முயற்சிகள். ஆனால் அவன் எதற்கும் அசைந்து கொடுக்காதமையால் ஒரு நாள் அவன் வீட்டுக்கு முன் இருந்த அவன் பைக்கில் என் ஹெல்மெட்டை மாட்டினேன். வந்து பார்த்த அவன் கெட்ட வார்த்தையிலேயே திட்ட ஆரம்பித்தான். "ஏண்டா, அறிவுகெட்ட முண்டம், உன் ஹெல்மெட்டை என் வண்டியில வெச்சிருக்கியே, அறிவில்லையாடா உனக்கு" என சொல்லிவிட்டு செருப்பைக் கழட்டிக் காட்டி, கன்னத்தில் அறைந்தான். ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் கண்ணில் பறக்க தொடங்கி விட்டது. என்னை இந்த உலகமே கவனிக்கத் தொடங்கியது போல ஒரு அவமானம்.
என்னை சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். நான் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் எல்லா கடன் கொடுத்தவர்களும் என்னைத் திட்டிக் கொண்டே இருப்பதால் நான் இருக்கும் இடமே கண்றாவியாக இருக்கும். என்னுடைய அந்த குணம் தான் அவன் என்னை வெறுக்கக் காரணமாம். கடனோலோடித்கொதுடுங்த்கதன்.சுடர்மணி என எல்லாம் கிறுக்கத் தொடங்கினேன். எந்த மரத்தைப் பார்த்தாலும் உச்சா போக ஆரம்பித்தேன். ஒரு ப்ராமிஸரி நோட்டும், பேனாவும் என் சட்டை பையில் வந்து குடியிருக்க தொடங்கியது. எந்த காரை பார்த்தாலும் அந்த கார் கதவில் கண்ணாடியில் கையெழுத்துப் போட்டுப் பார்க்க தொடங்கினேன். அவனிடம் கடன் கேட்கும் போது போட வேண்டுமே..
அவன் காதில் பூ வைக்க ஆசைப்பட்டேன். கடன் கொடுத்துவிட்டு அவனை என் பின்னாலேயே அலையவிட ஆசைப்பட்டேன். நண்பர்களை விட்டு தனியே வந்து சிந்திக்கத் தொடங்கினேன். ஒருமுறை கேட்டு அவன் ’தரமுடியாது போடா’ என்றபோது அபத்தமாய் அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. பொங்கியதை எல்லாம் கர்ச்சீப்பில் துடைத்து எடுத்தேன். அம்மாவின் சமையல் நின்று போனது. (ஊரைச் சுத்தற நாய்க்கு தண்டச் சோறு வேறா என்ற பேச்சோடு) அப்பாவின் அட்வைஸ்கள் அலுப்பாக இருந்தன.
என்னை நம்பாமல் சலூன் கடைகாரரை நம்பினேன்... கடன் கேட்க!
அவன் சொன்ன ஐடியாவின் படி, ஒரு நாள் அவனுக்கு - நண்பன் ஒருவனை விட்டு ஊற்றிக் கொடுத்து விட்டு மட்டையாகப் போகும் தருணத்தில், உதவுவது போல அவனைக் கொண்டு வீடு சேர்த்தேன். அடுத்தநாள் போய் பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டேன். அட! ’நாளை வா, தருகிறேன்’ என்றான்!
வித விதமாக அவனை குல்லா போட ஆசையாக இருந்தது. அதில் அவன் மயங்கி காசைத் தூக்கி எறிவதைப் பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆசையாக இருந்தது.
அடுத்த நாள் அவன் சொன்னது போலவே எனக்கு பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுத்தான். அவன் சட்டையை பிடித்து இழுத்து ‘இதை உன்னால் முடிஞ்சா திருப்பி வாங்கிக்கடா’ என்று சொல்ல ஆசை வந்தது. அடக்கிக் கொண்டேன்.
நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. அவனோ கொஞ்ச நாளுக்கு உறவினர் வீட்டுக்கு வந்திருந்தான். அவனை ஏமாற்றுவது என்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது எனக்கு.
எப்படியோ, கடன் வாங்கி, மூன்று மாசமாகியும் வட்டியும் கட்டாமல், அசலையும் அடைக்காமல் அவனை அலைக்கழித்தேன். ஃபைனான்ஸ்காரனையே ஏமாற்றியவன் என்கிற கர்வம் எனக்கு தனி அந்தஸ்தை கொடுத்திருந்தது. ஆனால் எந்த நேரத்தில் தான் அவன் மனைவிக்கு விஷயம் தெரிந்து என் தந்தையிடம் போவார்களோ என்று பயமாயும் இருந்தது.
ஒரு ஐடியா செய்தேன். அவனது முந்தைய ஊரின் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதினேன். அவன் இங்கேதான் இருக்கிறான் என்று. அவன் ஒட்டுமொத்தமாக பாய், படுக்கையெல்லாம் கட்டப்பட்டு வேறு ஊருக்கும் அழைத்துப் போக பட்டான். அவனும் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடன்கொடுப்பது என்பது பிச்சையிடுவதற்கு சமமாக அவனும், அவனது மனைவியும் நினைத்திருக்கக் கூடும்.
(ஆறு மாதங்களுக்கு பின்…………………)
அந்த பைஜாமாக் காரனின் பெயர் பிந்திரா சேட். அவன் வடநாடு. பான்பராக் போட்ட வாயும், வழு வழு தலையும், பானை போன்ற தொந்தியும், கையில் எப்போதும் வைத்திருக்கும் கறுப்பு லெதர் பேக்கும் காசில்லாதவர்கள் அத்தனை பேரையும் நின்று பார்க்க வைக்கும். அந்த லெதர் பேக்கே அவனின் சிறப்பம்சம். அவன் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் என்ன, கறுப்பாக இருந்தால் என்ன, உள்ளே இருக்கும் நோட்டின் நிறம் பச்சைதானே. (ஒருவேளை அதுவும் கறுப்போ?) அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த பச்சை நிற நோட்டுக்கள் கிட்ட தட்ட காசில்லாமல் திரியும் ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.
*
*
*
*
*
போங்கப்பா பதிவு ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது…
கடன் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!
குறிப்பு: இந்தப் பதிவின் மூலத்தை எழுதிய அபிஅப்பா என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன்!
அமீரக நண்பர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு!

மேலே உள்ள படத்தில் இருப்பது, ஏற்கனவே எனது ஈரோடு பயணப் பதிவில் குறிப்பிட்டிருந்த (வெயிலான் மூலம் அறிமுகமான) நண்பர், நல்லவர், வல்லவர் நாலும் தெரிந்தவர், விஷயஞானி மிஸ்டர்.நந்தகோபால்தான்.
மேட்டர் என்னன்னா, கோயமுத்தூர்ல இருக்கற இவரு, ஷார்ஜா பக்கத்துல இருக்கற அஜ்மன்-க்கு ஒரு வியாபார விஷயமா வர்றாராம்.
இது குறித்து செய்தி சேகரிக்க வேண்டி வெயிலான், கீழ்க்கண்ட மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார்...
அமீரக நண்பர்கள் விவரத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...!
***************************
(அஜ்மனில் அவர் இருக்கும்போது சந்திக்கும் பதிவர்களுக்கு ஒருமணிநேர மொக்கை இன்பம் கிடைக்கப் பெறுவது உறுதி!)
லட்சரூபாய் பரிசு நீங்கள் தரப்போகும் தகவலுக்கு அல்ல..
கீழ்க்கண்டதை மனப்பாடம் செய்து சொன்னால் லட்ச ரூபாய் பரிசு!
திஎரிந்னெஇநெஉ8இநுஎரு9ஃ375723உஒந்ப்ஜ்ஹ் ஃபிஒஹ்ச்ட்ஃப்
அச்ட்’ஃப்
அச்ட்க்ஃப்
ச்ட்க்ஃபொஅச்ட்க்ஃப்ய்ச்ட்யுஃபிந்49ட்ர்78ந்ர்
அச்ட்ஃபஃப்ஹ்நெஉர்ட்893ர்ஹ்நெஃப்]
ச்ட்’ஃப்த்ஃபுநெய்ர்87ந்90எத்ச்ட்ஃப்
ட்ஃபசு எஃப்8ஃநெ70ட்ர்நிபெஃப்ன்
இட் இஉநெஈஃப்க்ல்ச்தஹ்ச்ட்ஃப்3எ9-273ட்ரின்ஞ் 9 0க்ன்ள்989ர்
ச்ஃப்க்லஹ்ப்ஃப்ஃ97ர் ஒப்ஜ்9-ஊஇஹட்
;3கி07ர்82உ3ப்ட் 08ச்ஜ் 2459280 ஒக்ப்ம்ர்-078ஜ் ல்;க்2072 8
‘; ஞ்293488ஓஞ் ங்-3908ஈ ள்; ஓஉச் எக்க்90ஓஞ்089ஓஞ்இ0839உர்ந்
‘ரொப்ந்49-84ட்-இ ர்ஜ்0ஃ3ட்ய்80இஓஞ் ஈ=13904078234569[ற்ஸ்
ஏஓஊ248-05ஞ்ஈ973568ங்
ள்;
‘ ஓ-0487096ணீஓ[ஈ5-8ஓ 40689=-5ஓற்ஞ் 0ஏ
ஏ/ஓ-9-ஞ் 3-569=-ஈஓ[66--ஊ3 ற்5ஏற்7ண்6றீஓ7ஊஈஓ23ஙோண்8-
ஹ்ஜி989உஜ்9-8359ஞே
0485-ஈ4ஈ5-7ண்-590-ஊஓஆ0ன் -உ4 4ஜ் 058இ-8இஓஊ0-89ஊ5ஈ0
ஏ084ஈஞ்ற்-ற்0ஞ்;50=-95]-ளோ
/ ]=-ஈஏறூ5ஊஓ5]-07=-6ஈஓஏஞ் ஈஏ42ஏற்ஊ0ற்
ஏஞீஏ8490ஊஓஞ்ஓ8ண்90ஊஓ5ஞ்6ஓ8-0ஞ்-082ஓஞோஊ9ஜ்]
ஏஓ4-804ஈ63408ற்ண்356359ஈ35[804923[6[580-ஞ்ஸ்
49-9-346[5ஈண்0-8ஸ்றோஞ்3069ஊ3ஓஓ[85-0ஏஈ340540ஈ[4[
ஏ5840-ஈ0-4ஓஞோஞ்ஓஈஊஈ0-83560[560[424ஓ[0[ஆஸ்5358735ளோ4ற்
ஓ4803ஈஓஞ் 5;ள்0-89 ஞேள்;ஞ் 0-8 ஈஏஊறூற்ஞ்ஈஓஊ4
ஸ்றீ39057239ற்ஞ்089ஈற்ஞ்ஓண் 8ஏ 9ஊண்9ஊஏற்
ஏ ஏ89ற்7 90234ஊ5ஓஏஞ் ஊ
ஆற் 39ற்923ஊ593ஞோற்ஞ்ள்;ஆஸ்ஞ்9 849
ஆஸ் 793ஊ5ஈ436
ஏ4
ஏஏ 923ற்
ஏற்
ஏ
4460ஏற்
ஏறா
ச்க்ஜி ந்ச்க்ன்க்ஃப்
ச்ல்ட்ஜிசுநெர்64ஃப்ட்5ஃப்
\ட்ஃப்;ட்க்ஃப்பொட்ஃப்
ட்ஃப்ச்த்ஃபிஉயெநெர்\\
ட்ஃப்ஜ்ப்ஹுயெர்09745இஜ்ர்
ட்ஃப்க்ஜுய்4
ட்ல்ஃப்ஜ்க் உஎப்ஜ்ந்4ஜ்ட் ட்
எஃபெஇந்47உஒஞீண் 7ஊஏற்
ஞ்ஞ்
-565ற்ங்
ஸ்
ங்
ற்044 -ஓ-69ளாஸ்0[ஈஏ-08346ஓ ஆஏஓ[ ஞா
3
*******************************************************
இதை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து ஒட்டி, ஒப்பிச்சாச்சுன்னு சொல்லக்கூடாது! ஃபோன்ல கூப்ட்டு சொல்லுங்க. (ஆனா நான் ஃபோனை எடுக்கமாட்டேன்!)
பின்குறிப்பு:-
கீபேட் நல்லா வேலை செய்யுதுப்பா!
Labels: உதவி , துபாய் , நையாண்டி , மொக்கையோ மொக்கை
குசும்பனுக்காக ஒரு ‘கும்மி’ப் பதிவு!
”யோவ்... உன்னை யாரு சீரியஸ் மேட்டர் எல்லாம் எழுதச் சொன்னாங்க? ஒழுங்கா இருக்க முடியாதா” என்று நான் இருக்கும் 8-வது வார்டு மெம்பர் முதல் ஒபாமா வரை பல பக்கங்களிலிருந்தும் ஓயாத தொலை பேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஏற்கனவே மின்சாரப் பற்றாக்குறைக்கு செல்ஃபோனின் அளவற்ற பயன்பாடும் ஒரு காரணம் என்று சொல்லித் தொலைத்து விட்டதால், எங்கே நான் அடிக்கடி ஃபோன் பேசுவதை ஃபோட்டோ எடுத்து பதிவாகப் போட்டுவிடுவார்களோ என்று பயந்து ஃபோனையே எடுப்பதில்லை!
அதனால், மின்னஞ்சல் மூலமும் சூப்பர் பதிவு, இது உனக்குத் தேவையாடா, அருமையாகக் கேட்டுள்ளீர்கள், எதுக்கு இந்த வேலை என்று பாராட்டுக்கள் குவிந்து இன்பாக்ஸ் முதன் முதலில் காதலிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருப்பவனின் அருகிலுள்ள குப்பைத் தொட்டி மாதிரி நிறைந்துவிட்டது!
ஆகவே.. இந்த கும்மிப் பதிவை எழுதி, அதை கும்மியடிப்போர் சங்கத் தலைவர், பின்னூட்ட சுனாமி, கேள்வியின் நாயகன் குசும்பனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இந்தப் பதிவு கும்மிப் பதிவல்ல என்று யாரும் சொல்ல முடியாது.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கும்மி:-
கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை. 'கும்மி' ஆட்டம் என்பது பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது.
(நன்றி: கணேஷ்பீடியா... ச்சே ஸாரி, விக்கிபீடியா)
.
.
.
.
.
.
.
.
.
.
இனி வலைப்பதிவுக் கும்மி:-
கும்மி பலர் கூடி ஒரு பதிவுக்கு பின்னூட்டம் போடும் ஒருவகைக் கூத்து அல்லது லொள்ளு. இது வலையுலகக் காலம் தொட்டு வரும் ஒரு குசும்பன் கலை. 'கும்மி' ஆட்டம் என்பது பலர் மாற்றி மாற்றி சம்பந்தமில்லாமல் பின்னூட்டிக்கொண்டோ, அல்லது இருவர் மட்டும் சரிசமமாக பின்னூட்டிக்கொண்டோ வரும்போது பதிவுக்குத் தகாதவாறு தன் பின்னூட்டத்தைத் தட்டி பதிவு எழுதினவரின் மூளையையும்(இருந்தால்), கையையும், மனசையும் அசைத்து, இனிமேல் அவனை எழுதவே விடச் செய்யாமலிருக்கக் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வலையுலகம் முழுவதும் கும்மி வழக்கில் உள்ளது.
************************************************8
ஒரு வேண்டுகோள் & அறிவிப்பு:-
”பின்னோட்டங்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பது ஒரு பின்னோட்டம் இட்டவர்களுக்கு செய்கிற ஒரு basic respect ஆக உங்களுக்கு தோன்ற வில்லையா ?”
இப்படி ஒரு அன்பர் மின்னஞ்சல் மூலமாகக் கேட்டிருக்கிறார். (அவர் பின்னோட்டம் என்றுதான் சொல்லியிருந்தார்.)
ஒரு வாரமாக நான் அலுவலக வேலையாக அருகிலுள்ள பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும், கிராமங்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பணியை ஆரம்பித்து வைத்தால் எனக்கு மகிழ்வைத் தருமென்பதால் சுய ஆர்வத்தில் அதைச் செய்கிறேன். நாளையோ, மறுநாளோ பதிவில் சொல்கிறேன். என்னை அழைத்துப் பேசிய சில நண்பர்களுக்கும் அது தெரியும். அதனாலதான் இணையம் பக்கம் வந்து பதில் கொடுக்க முடியவில்லை. என்னைப் புரிந்துகொண்ட எனது லட்சக்கணக்கான வாசகர்களுக்கு... (ஐயோ, குசும்பா அடிக்காதப்பா... சரி.. சரி..) என்னைப் புரிந்து கொண்டிருக்கும் அந்த 39 பேருக்கு அது தெரியும். இருந்தாலும் மேலே உள்ளது போல கேள்வி கேட்பவர்களுக்காக இந்த விளக்கம்.
அதேபோல ஞாயிறு பதிவு போட்டபின், அந்த தினம் குடும்பத்துக்க்காக மட்டுமே. முடிந்தால் மட்டுமே வந்து பதில் சொல்ல முடியும்.
ஆகவே, தயங்காமல், தப்பா நெனைக்காமல் கும்மிகளைத் தொடரலாம்!
பதிவர் வால்பையன் (EXCLUSIVE PHOTO)
நேற்று வெயிலான் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குப் போகலாமா என்று கூப்பிட்டதோடு மட்டுமின்றி காரை எடுத்துக் கொண்டு வந்தும் விட்டார். காரோடு, ஈரோடு போனோம்!
(வெள்ளைச் சட்டை - வெயிலான், வெள்ளை மனசு - அடியேன்!)
ஈரோடு என்றதுமே, வெயிலானின் செல்லிலிருந்து வால்பையனை அழைத்தேன். அந்த சம்பாஷணையை நீங்களும் கேளுங்க..
“வால்பையன்-ங்களா?”
“ஆமாங்க. நான் சசிக்குமார் பேசறேங்க”
“எங்கிருந்து?”
“தமிழ்மணத்துலயிருந்து”
மனுஷன் அந்தப் பக்கம் எழுந்துட்டாரு! “சார்.. சொல்லுங்க சொல்லுங்க”
“இந்த வாரம் நட்சரத்திரப் பதிவரா உங்களை தேர்வு செஞ்சிருக்கோம். எழுத முடியுமா?”
அவ்வளவுதான். ஏங்க, ஒரு மனுஷன் `எப்படி தமிழ்மணத்துக்கு என் நம்பர் கிடைக்கும்’ன்னு கூடவா யோசிக்க மாட்டாரு? அநியாயத்துக்கு நல்லவரா இருந்தாரு! உடனே “சார்... ரொம்ப நன்றிங்க. நான் என்னோட தொழிலைப் பத்தின நிறைய விஷயங்களை பதிவா போடணும்ன்னு நெனைச்சிருக்கேன். போன வாரம்தான் எங்க பாஸ்கிட்ட நட்சத்திரப் பதிவரா செலக்ட் ஆன மாதிரி கனவு கண்டேன்ன்னு சொல்லீட்டிருந்தேன். இப்ப பலிச்சிடுச்சு” அப்படி ஆரம்பிச்சு நான் `ஹலோ ஹலோ’ ன்னு கத்தினதைக் கூட கேக்காம பூரிச்சுப் போய் புளகாங்கிதமாகி...
எனக்கு ஏண்டா சொன்னோம்ன்னு ஆயிடுச்சு!
நேர்ல பாத்தப்ப ஒரே பக்திமானா இருந்தாரு. கோவிலுக்குப் போலாம், கோவிலுக்குப் போலாம்ன்னு ஒரே நச்சரிப்பு! புத்தகக் கண்காட்சிக்கு முதல்ல போலாம்ன்னதக் கூட கேக்கல!
அவ்ளோ நல்லவரு ஃபோட்டோ எடுத்தப்ப, ”என் ஃபோட்டோவைப் போடதீங்க”ன்னு சொன்னாரு!
அவரு திட்டினாலும் பரவால்லன்னு அவரு ஃபோட்டோ போடறேன்.
ஈரோடு புத்தகக் கண்காட்சி பற்றியும், அதற்கு முன்னும், பின்னும் நாங்கள் போன புனிதத் தலங்கள் பற்றியும் நாளைக்கு எழுதறேன்.
ஓக்கேவா?
ஸாரிங்க வால்பையன் உங்க பேச்சைக் கேக்காம உங்க ஃபோட்டோ போடறதுக்கு!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
எச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்
ஒரு அவசரப் பதிவு:-
சமீப காலமாக லக்கிலுக் அவர்களை குறிவைத்து எழும்பும் குரல்களில் இருக்கும் ஒருபக்க சார்பு அவரது வாசகர்களாகிய எங்களை ஒரு புறம் எரிச்சலடைய வைத்தாலும், இவற்றை எழுப்புபவர்களின் மையம் எங்களை சற்று சந்தேகக்கண்ணோடு தான் அவர்களை பார்க்கவைக்கிறது...தமிழ் வாசகர்களின் கேள்விகள் என்று பொதுமைப்படுத்தி எழுதிய கோவி.கண்ணனாகட்டும், யெஸ்.பாலபாரதி, அதிஷா ஆகிய பலரும் வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும், எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தது.
ரொம்ப எரியாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்து கும்பிடுங்க...இல்லைனா போயஸ் கார்டன் பக்கமோ, உடுப்பி கார்டன் பக்கமோ, வடபழனி , விருகம்பாக்கம் , தசரதபுரம் பக்கமோ கும்பிடுங்க ... நாங்க மடிப்பாக்கம் பக்கம் ஒதுங்கிக்கறோம் , எங்கள் அன்புக்குரிய லக்கிலுக் ஒரு ஃபீனிக்ஸ் !!! நாளைய பதிவுல மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!
யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க பாஸு! இந்தப் பதிவைப் படிச்சுக்கங்க...!
(அவரும் செந்தழல் ரவி கிட்ட இருந்துதான் சுட்டாரென்பதை அறியவும்!)
லக்கியின் படம் சென்ஷியிடமிருந்து சுட்டது என்பதையும் அறியவும்!
ஒரு பாடல் உருவாகிறது
டைரக்டர் கிச்சுகிச்சா இசையமைப்பாளர் மீஜிக் மன்னாருடன் தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்அமர்ந்திருக்கிறார்.
“என்ன டைரக்டரே, இன்னும் பாடலாசிரியரைக் காணோம்?”
“பாடலாசிரியருக்கா வெய்ட் பண்ணீட்டிருக்கீங்க? நான்கூட இன்னும் உங்களுக்கு வர்லியோன்னு நினைச்சேன்”
“வந்திருச்சேய்யா, இப்போதானே டாய்லெட் போய்..”
“இல்லீங்க... மூடு வர்லியோன்னு கேட்டேன்..”
“அது கிடக்குது கழுத. பாடலாசிரியர் எங்கீங்க?”
“ஹி..ஹி.. நாந்தான் இந்தப் படத்துக்கு எல்லாப் பாட்டையும் எழுதறேன்”
“என்னது? நீதான் எழுதறியா? கிழிஞ்சது போ! நீ எழுதற வசனத்தையே எவனும் புரிஞ்சுக்க மாட்டீங்கறான். இதுல பாட்டு வேற எழுத வந்துட்டியா?”
“நீங்க போடற ம்யூசிக்ல பாட்டெங்கே கேக்கப் போகுது?”
“சரி... என்னமோ.. எழுதறது உம் பாடு, கேக்கறது கேக்கறவன் பாடு... சிச்சுவேஷன சொல்லு”
“அந்தக் கிராமத்துல இருக்கற..”
“என்னது? கிராமமா? நேத்துதான் தயாரிப்பாளர்ட்ட இதுவரைக்கும் போகாத நாட்டுக்கெல்லாம் போகணும்ன்னு ஆஸ்திரியாவிக்கு விசாவெல்லாம் ரெடி பண்ணச் சொன்ன?”
“அங்கதாங்க போய் கிராமத்து செட் போடப்போறேன்..”
”அதுசரி! ஏன்யா இங்க இருக்கற கிராமமெல்லாம் என்னாச்சு?”
”இந்த கிராமங்களெல்லாம் தன் சுயத்தை இழந்துவிட்டன. மரங்களில் கூடு கட்டிக் கொண்டிருந்த குருவிகள், இன்று ஃப்ளாட் வெண்டிலேட்டர்களிலே..”
“யோவ்... என்ன கேமராவா ஓடுது? எதுக்கு இவ்ளோ எமோஷன்?”
“சாரிங்க.. ரெண்டு நாளா மனப்பாடம் பண்ணீட்டிருந்தேனா.. அதான்..”
“ஓஹோ... மனப்பாடம் பண்ணித்தான் பேசறியா? அன்னிக்கு ஒரு இண்டர்வ்யூல எல்லாமே என் மனசிலேர்ந்து வருதுன்ன?”
“மனப்பாடம் பண்ணினா, மனசுக்குள்ளதானே இருக்கும்?”
“உன்னையெல்லாம்.. சரி. என்ன சிச்சுவேஷன்?”
”சிச்சுவேஷன் என்னன்னா ஹீரோ உக்கார்ந்திருக்கற கோவில்ல...”
“நீ என்ன `நான்கடவுளா எடுக்கற? ஹீரோவை கோவில்ல உக்காரவெச்சிருக்க?”
”இல்லிங்க நானெடுக்கறது `நான் பிச்சைக்காரன்’”
”தயாரிப்பாளரை மனசுல வெச்சுட்டு எடுக்கற போல... சரி சொல்லு”
“அந்தக் கோவிலுக்கு ஹெராயின்.. ச்சே.. ஹீரோயின் வர்றா, வந்து ஒரு ரூபா ஹீரோவுக்கு போடறா, அப்போ ஒரு ரூபாய்ல என்ன வாங்க முடியும்ன்னு கொதிச்சுப் போய், ஹீரோ நாட்டு விலைவாசிய பாட்டா பாடறான்”
”அடா.. அடா... பிச்சைக்காரன்கூட கேக்கற அளவுக்கு ஆயிடுச்சா நாட்டு நிலைமை?”
“சார்.. பிச்சைக்காரங்கள அவ்வளவு தாழ்வா நினைச்சுடாதீங்க”
“சரி, ம்ம்ம்ம், இது ஓக்கேவான்னு பாரு, தனனா தனனா தனனா, தந்தானா தந்தானா”
“தந்தாளா”ன்னு தானே வரணும்? தந்தானா’ன்னா ஆண்பால் வருது”
“ஆண்பாலா? உன் வாயில கள்ளிப்பால ஊத்த. இது மெட்டுய்யா..”
”ஓ! சரி.. சரி.. தனனா.. தனனா..” (மனதுக்குள் பாடிப்பார்த்து) இந்த வரிகள் ஓக்கேவா பாருங்க...”
“சொல்லு”
“தகஜம் தகஜம் தகஜம், தம்கிடதம் தம்கிடதம்”
“யோவ்... என்ன நக்கலா? மியீசிக்கெல்லாம் நான் போட்டுக்கறேன். நீ பாட்டு வரிய சொல்லு”
“பாட்டு வரிதாங்க இது...”
“பிச்சைக்காரன் எதுக்குய்யா தகஜம்னெல்லாம் பாடணும்?”
“எனக்கு பாரதத்து மேல ஆர்வம் அதிகம்க”
“பாரதத்து மேலயா? அடுத்த ப்ரைம் மினிஸ்டர் ஆகப் போறியா?”
“ச்சே.. பரதத்து மேல’ன்னு சொல்ல வந்தேன்”
“அடிங்க... வேற சொல்லுய்யா” என்றபோது தயாரிப்பாளர் உள்ளே நுழைகிறார்.
“டைரக்டரே... நீரொண்ணும் பாட்டு எழுதிக் கிழிக்க வேண்டாம். அதுக்கு புதுசா மூணு பேரைக் கூட்டியாந்திருக்கேன்” என்கிறார்.
இயக்குனரும், இசையமைப்பாளாரும் வாசலைப் பார்க்க...
அங்கே...
சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட்!
-என் வலையுலக வரலாற்றில் (?) முதல் முறையாக
(தொடரும்)
-----------------------
டிஸ்கி 1: ஒண்ணுமில்ல.. எழுத எழுத இன்னைக்கு கொஞ்சம் நேரமா வரச்சொல்லி எம்.டி.-யிடமிருந்து ஃபோன். அதான் தொடரும் போட்டுட்டேன்.
டிஸ்கி 2: இந்தப் பின்குறிப்புகளை ‘டிஸ்கி’ன்னு ஏன் சொல்றாங்க? அதுக்கு என்ன அர்த்தம்? (அது தெரியாமயே இவ்ளோ நாள் எழுதீட்டிருந்திருக்கேன்!)
ஆபரேஷன் சென்ஷி
அது ஒரு ஜூலை மாத மாலை.
கோவி.கண்ணன், முத்துலெட்சுமி கயல்விழி, வெண்பூ மற்றும் சில பதிவர்கள் அந்த காவல் நிலையத்திற்குள் செல்கின்றனர்.
“இன்ஸ்பெக்டரைப் பாக்கணும்”
‘வாங்க.. என்ன பிராது?’ வரவேற்கிறார் இன்ஸ்பெக்டர் வடகரைவேலன்.
”நாங்கெல்லாம் வலைப்பதிவர்கள்... பிளாக்கர்ஸ்ன்னு சொல்லுவாங்க” கோவியார் ஆரம்பிக்கிறார்.
“யாருலே சொல்லுதாக அப்பிடி?”
`ம்க்கும்! வெளங்குன மாதிரிதான்’ என்று மனசுக்குள் நினைத்த வெண்பூ, முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களைப் பார்த்து...
“கயலக்கா”
“அப்படிக் கூப்பிடாதீங்க”
“சரி.. சரி.. முத்தக்கா.. இந்த இன்ஸ்பெக்டர் ஏதாவது கோக்குமாக்கா கேக்கறதுக்கு முன்னாடி நீங்க எல்லாத்தையும் விலாவாரியா சொல்லீடுங்க”
”நாங்க இணையத்துல எங்க படைப்புகளை எழுதீட்டு இருக்கோம். எங்கள்ல ஒருத்தரான சென்ஷி-ங்கறவரை கொஞ்ச நாளா காணல. அது சம்பந்தமா ஒரு புகார் கொடுக்க வந்தோம்”
“ஓஹோ!” என்று புகாரை வாங்கி அவர்களை அனுப்பிவிட்டு ”வெயிலான்.. இங்க வாங்க” என்று அழைக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டர் வெயிலானிடம் புகாரை விளக்குறார் வேலன்.
“உங்களை நம்பி இந்தப் புகாரைக் குடுத்திருக்காங்க. இத கண்டுபிடிக்கலைன்னா உங்க மானம் கப்பலேறிடும்”
“நீ வேற கப்பல், கிப்பல்ன்னு பயமுறுத்தாதய்யா. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் வரப் போறாருல்ல. அவர்கிட்டயே இத ஒப்படைக்கலாம்”
அடுத்த சில மணிநேரங்களில்.. கௌபாய் மீஜிக் பின்னணியில் ஒலிக்க, பெரிய மீசையும் தொப்பியுமாய் தனது ஜீப்பில் வந்திறங்கினார் க்ரைம் பிராஞ்ச் ஸ்பெஷல் ஆபீசர் லதானந்த். கூடவே அவரது பெட் கென்சி வாலாட்டியபடி வருகிறது.
வந்ததுமே இன்ஸ்பெக்டரை அழைக்கிறார்.
“ஏனுங்... எதுனா கேசு வந்துச்சுங்களாக்கும்?”
“ஆமாங்..“ என்று அவர் போலவே பேசவும் தனது மீசை துடிக்க ஒரு முறை முறைக்கிறார். உடனே வெயிலானை அழைத்து “அந்தப் புகாரை கொண்டாங்க” என்கிறார் வேலன்.
வெயிலான் அந்தப் புகாரோடு லதானந்திடம் வருகிறார்.
“அங்கிள்.....”
“அடக்கெரகமே.. என்னதிது.. இங்கிதம் இல்லாம... நானென்ன ஒனக்கு ஒரம்பரையாக்கும்? ச்சொம்மா அங்கிளு, ஆட்டுக்குட்டீன்னு. நானிப்போ ஆபீசர். தெரியுமில்ல?”
“சொரிங்க ஆபீசர்”
” `கெதக்’க்குங்குது எனக்கு. என்ரா சொன்ன?”
”சாரிங்க ஆபீசர்”
“ஆங்...” என்றபடி புகாரைப் படிக்கிறார். உதட்டைச் சுழித்தபடி “ம்க்கும்.. ஒரு எளவும் புரியல. என்னமோ வலைன்ராங்க, பதிவுன்ராங்க. தமிழ்மணம்ரானுங்க... நமக்கு வாய்மணம்தான் தெரியும்” என்று முனகியபடி தனது நண்பர் அப்பநாய்க்கம்பாளையம் அரங்கமுத்துசாமிக்கு தொலைபேசுகிறார்.
“அய்யா... இந்த வலைப்பதிவு, தமிழ்மணம்ங்கறதப்பத்தி ஒங்களுக்கு தெரியுமா”
“குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு காட்சி. தலைவன் தலைவியோடு ஊடல் கொள்கிறான். மலைகளும் மலைசார்ந்த இடமுமான..”
“இவரு வேற” என்று ஃபோனைத் துண்டித்தவராய் வெயிலானை அழைக்கிறாய்.
“வெயிலு... என்ன பண்ணலாம்?”
“நேரா ரூம் போட்டு, எனக்கு வோட்....” என்று சொல்ல ஆரம்பிக்க
“யோவ்... யோவ்.. வாய மூடு. அதெல்லாம் இங்கன பேசிராத. நம்ம இன்ஸ்பெக்டரைக் கூப்பிடு”
“இல்லீங்க. நமக்கு அந்தப் பழக்கமில்லைங்க” என்று வேலனின் குரல் பின்னால் கேட்கிறது.
“அட... அதில்ல. நீரு கம்ப்யூட்டர் சமாச்சாரத்துல கில்லாடியாச்சே... கொஞ்சம் இதெல்லாம் என்னன்னு பாரும்”
“அதத்தான் பாத்துட்டிருந்தேன்” என்று அவர்களை கம்ப்யூட்டர் அருகே அழைத்துச் செல்கிறார்.
“இதுதான் தமிழ்மணம்” திறந்துவைக்கப்பட்டிருந்த இணையப் பக்கத்தைக் காண்பிக்கிறார்.
பொறுமையாகப் பார்க்கிறார் லதானந்த். “இதென்ன... மட்டுறுத்தல், நடந்தது என்ன”
“அதெல்லாம் தொறந்துடாதீங்க. நமக்கு வேணாம். இதுல சென்ஷி-ங்கற பேரு இங்க இருக்கு பாருங்க”
“அட.. ஆமா...” என்று திறக்கிறார்கள். ஒரு சில பின்னூட்டங்களில் அவரது பெயர். அதில் ஒரு வலைப்பதிவருக்கு தொலைபேசுகிறார்.
”சென்ஷி வந்தாரா”
“இப்போதான் இங்க வந்து பின்னூட்டம் போட்டாரு. இதோ இருக்காரு. இருங்க லைன் தர்றேன்”
“வணக்கம்” என்கிறார் சென்ஷி.
“அட! ஆளப் புடிச்சுட்டனாட்ட இருக்கு” என்று சந்தோஷத்துடன் கூறுகிறார் லதானந்த். `இது சென்ஷிதானான்னு தெரியலயே’ என்று வேலனிடம் சந்தேகமாய்க் கேட்டவாறு எதிர்முனையில் பேசுகிறார். “எங்க ராசா இருக்க நீ? ஒன்னையக் காணோமின்னு புகார் வந்திருக்கு ராசா”
“நிறப்பிரிகையின் இருவேறு துருவங்களாய் கருதப்பட்டாலும் கருப்பு வெள்ளை பிரியாதது போல, இந்தப் பதிவுலகத்தை பூரணமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் என் போன்றவர்களை, எல்லையில்லா பிரபஞ்ச சக்தியாயும், பரிணாமக் குறியீடாகவும் இருக்கும் இணையத்திலிருந்து பிரிக்க முடியாது. ஆயினும்”
“அட.. எங்கன இருக்கன்னு தானப்பா கேட்டேன்”
“மீட்சிகளின் வழி கசியும் உதிரம்போல, காலச் சூழலும் இணையத்தொல்லைகளும் என்னை அடர் கானகத்தினுள் சிக்கிக்கொண்ட பெண்ணாய் தவித்து, பின்நவீனத்துவ”
“ஆஹா.. இது சென்ஷியேதாங்க” வேலன் உற்சாகமாகிறார்.
”எப்படிச் சொல்றீரு?”
“இந்தப் பின்நவீனத்துவத்துக்கு அவருதான் பேடண்ட் வாங்கீருக்காரு”
”சரி.. சரி.. இருங்க... என்ன சொல்றாருன்னு கேப்பம்”
“சாட்சியாய் விளங்கும் தெளிவற்ற பாதையினூடே இருட்டில் தவிக்கும் குழந்தாயாய் மனம் பல நிமிஷகணங்களில்”
”நிமிஷ கணமா? ஐய.. தல சுத்துதே ராசா”
“எதிராளியின் மீதும், எழுத்தின்மீதும் பழியைச் சுமத்தி தப்பித்துச் செல்லும் வழியில், தெளிந்த நீரோடையின் வடிவ உற்பத்தி வரும் பிரதிபலிப்பில் தொக்கித் தெரியும் நவீனத்துவம் எதேச்சாதிகாரமாய் ஒருத்தரிடமே ஒற்றைப்புள்ளியாய் மாட்டிக்கொண்டு தவிக்கும் சூழலில்...”
இங்கே லதானந்த்தின் செல்ஃபோன் வெடித்துச் சிதறுகிறது.
”அடக் கெரகமே.. பாலாஜிகிட்ட என்ன பதில் சொல்றது?” என்று உடைந்த ஃபோனை விரக்தியாய்ப் பார்த்தபடி “வேலன் சென்ஷி இப்படியாக என்ன காரணம்?” என்று கேட்க வேலன் அழைக்கிறார்.
“சார்... இங்கே பாருங்கள். தொலைதூர அடர் கானகத்தே வெளிச்சப் புள்ளியாய் ஒரு அடையாளம் தென்படுவதுபோல...”
“யோவ்... என்னாச்சுய்யா ஒனக்கு?”
“ச்சே” என்று தலையை சிலுப்பிக் கொள்கிறார் வேலன். “இதப் படிங்க” என்று ஒரு வலைப் பக்கத்தைக் காட்டுகிறார்.
படித்து, பிறகு கொஞ்ச நேரம் இணையத்தைப் புரட்டியவர் உற்சாகமாய் நிமிர்கிறார்.
“ஜீப்பை எடு.. வேலன் உக்காருங்க. அடரஸ் தெரியுமா?” என்று ஜீப்பில் தாவுகிறார்.
“வெயிலான் குடுத்தாப்ல” வேலன் சொல்ல, ஜீப் பயணிக்கிறது.
“வெரிகுட் வேலன். சரியான துப்பு கொடுத்தீங்க. ஒங்க சந்தேகம் நெசந்தேன். அவனப் புடிச்சு, முட்டிக்கு முட்டி தட்டினா எல்லாம் தெரியும்”
“ஆமா... சார். ஒழுங்கா கும்மி, மொக்கைன்னு இருந்தவரை கேள்விகேட்டு இப்படி ஆக்கிட்டான்”
“அதுமில்லாம அவன் எழுதியிருந்ததயெல்லாம் படிச்சீங்கள்ல? எப்பப் பாரு பழசையே பேசிகிட்டு, சரக்கே இல்லாத ஆசாமி அவன்” என்றவாறு அந்த வீட்டின் முன் நிறுத்தி காலிங்பெல்லை அழுத்துகிறார்.
------------------------------
பரிசல்காரன்: “ச்சே.. ஒரு மொக்கைப் பதிவு போடலாம்னா யாரோ வந்து கூப்பிடறாங்க.. இருங்க யாருன்னு பாத்துட்டு வர்றேன்”
Labels: கற்பனை , நகைச்சுவை , நையாண்டி , பதிவர்வட்டம் , மொக்கை
பலசரக்கு... பழைய சரக்கு!
கி.வா.ஜகந்நாதனைத் தெரியுமில்லையா உங்களுக்கு? சிலேடைப் பேச்சிலே வல்லவர்…! இனி மேலே (ச்சே...) கீழே படியுங்கள்..
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.
“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.
“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!
********************
”எங்க தாத்தா செத்துட்டார். `காலமானார்’ பகுதியில விளம்பரம் கொடுக்கணும். எவ்வளவு செலவாகும்?”
”செண்டிமீட்டருக்கு 150 ரூபாய்”
“அடேங்கப்பா.. எங்க தாத்தா ஆறு அடி, மூணு செண்டிமீட்டராச்சே! கட்டுப்படியாகாது..”
****************************
குணாவும். ஜனாவும் வாடகைப் படகை எடுத்துக்கொண்டு ஏரியில் மீன் பிடிக்கப் போனார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறைய மீனகள் கிடைக்க, குஷியானான் குணா. “டேய்.. ஜனா.. இந்த இடத்தைக் குறிச்சு வெச்சுக்கோ. நாளைக்கும் இங்கேயே வரலாம்” என்றான்.
மறுநாள்... படகுத்துறை நோக்கிப் போகும்போது “ஜனா.. நான் சொன்னமாதிரி அந்த இடத்தை நீ குறிச்சு வெச்சிருக்கதானே?” என்று கேட்டான் குணா.
“பின்னே? அந்தப் படகோட அடிப்பாகத்துல ஒரு பெருக்கல் குறி போட்டு வெச்சிருக்கேனே” என்று ஜனா சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் குணா. ரொம்ப டென்ஷனோடு கேட்டான்... “முட்டாள்... முட்டாள்.. இன்னைக்கும் அந்தப் படகே வாடகைக்குக் கிடைக்குமாடா?”
***************************
“குருவே.. நல்வாக்கு அருளுங்கள்” - சிஷ்யன் கேட்டான்.
“அப்பன் இறக்கிறான். மகன் இறக்கிறான்.. மகனுக்கு மகன் இறக்கிறான்” – புன்சிரிப்புடன் சொன்னார் குரு.
“என்ன குருவே... இதுவா நல்வாக்கு?”
“யோசித்துப் பார். இந்த வரிசையில் எல்லாம் நடந்தால் எத்தனை நிம்மதி! வரிசை தப்பி அப்பா இருக்கும்போதே மகனோ, மகன் இருக்கும்போதே அவன் பிள்ளைடோ இறந்தால் எத்தனை துக்கம்?”
**********************
நெப்போலியன் : “என்னோட டிக்ஷனரியில IMPOSSIBLE என்கிற வார்த்தையே இல்லை!”
உடனே சொன்னான் நம்மாளு ஒருத்தன்.. “அதெல்லாம் டிக்ஷனரி வாங்கறப்பவே பாத்திருக்கணும்”
*************************
மருந்துக் கடைக்காரரிடம் ஒரு பெண் விஷம் கேட்கிறாள்.
“டாக்டர் சீட்டு இல்லாம அதெல்லாம் தர முடியாது”
“என் வீட்டுக்காரர் சின்னவீடு வெச்சிருக்கார். அவருக்கு சாப்பாட்டுல கலந்து கொடுக்கணும்”
“எத வெச்சு அவர சந்தேகப்படறீங்க?”
“இதோ பாருங்க” என்று அவள் கணவன் வேறொருத்தியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள்.
உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.
“எதுக்கு ரெண்டு?”
“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!”
***********************
போலீஸ்காரங்க கோவிச்சுக்கக் கூடாது..!
காட்டுல ஒரு முரட்டுப் புலி. அதைப் பிடிக்க பலநாட்டுப் போலீசும் முயற்சிக்கறாங்க. தமிழ்நாட்டுப் போலீஸ் உள்ளே புகுந்த ஒரு மணி நேரத்துல புலியைப் பிடிச்சுட்டதா செய்தி பரவுது. டி.வி.காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் வேகமா காட்டுக்குள்ள போய்ப் பாத்தா...
தமிழ்நாட்டுப் போலீஸ் சுத்தி நிக்க, நடுவுல ஒரு கரடி பரிதாபமா மிரள மிரள நின்னுட்டிருந்ததாம். போலீஸ்காரங்க அத லத்திசார்ஜ் பண்ணிகிட்டே சொல்லீட்டிருந்தாங்க.....
“புலின்னு ஒப்புக்கோ.. புலின்னு ஒப்புக்கோ”
-------------------------
இது ஒரு `ஏ’ ஜோக்.... வேணாங்கறவங்க படிக்காதீங்க..!
உள்ளாடை வாங்கிய இளம்பெண் கடைக்காரரைக் கேட்டாள்.
“இதுமேல எம்பிராய்டரில எழுதித் தரமுடியுமா?”
“சொல்லுங்க மேடம் என்னன்னு எழுதணும்?”
“`இங்கே எழுதியிருப்பதை நீ படிக்க முடிந்தால் நாம் மிக நெருங்கிவிட்டோம் என்று அர்த்தம்’ அப்படீன்னு எழுதணும்”
“ஆங்கிலத்திலா... ஹிந்தியிலா.. எந்த மொழியில எழுத?”
“ப்ரெய்லியில் எழுதுங்க”
Labels: JOKES , நகைச்சுவை , நையாண்டி , பழைய ஜோக்ஸ் , மொக்கை
இவர்கள் வீட்டில் இப்படித்தான் பேசுவார்கள்
நேற்று நான் சொன்ன `சும்மா’ இதழிலிருந்து...
**********
இந்தப் பிரபலங்கள் வீட்டில், தங்கள் மனைவியிடம் இப்படித்தான் காபி கேட்பார்கள்..
மணிரத்னம்:
மணி: ”காபி”
சுஹாசினி: ”நேரமாகும்”
”எனக்கு வேணும். இப்ப வேணும்..”
”முடியாது”
”ஏன்?”
”முடியாதுன்னா முடியாது”
”அதான் ஏன்?”
”ஏன்னா.. கேஸ்ல சாப்பாடும் சாம்பாரும் வெந்துட்டிருக்கு”
”நிறுத்து”
”எதை..எதை நிறுத்தறது?”
”சாம்பாரை நிறுத்து..”
”ஏன்?”
”நாலு பேருக்கு காபி போடணும்ன்னா சாம்பாரை நிறுத்தறது தப்பே இல்ல..”
டி.ராஜேந்தர்:
டி.ஆர்: ”ஏய்..உஷா.. மழை வருது லேசா.. நான் நேத்துப் பாத்தேன் பாட்ஷா.. ஒரு காபி போடு பேஷா..”
உஷா: ”அடுப்புல சாப்பாடு, சாம்பார் வெந்துட்டிருக்கு”
”எடை போடணும்னா தராசுல நிறுத்துப் போடு. காபி போடணும்ன்னா ஏதோ ஒண்ணை நிறுத்திப் போடு”
“முடியாது. சாப்பாடு போடலைன்னா விரலால வித்தை காட்டுவேன்னு பயமுறுத்தறான் சிம்பு”
“சிம்புவா? சிம்புவா அப்படிச் சொன்னான்? (உடனே கண்களில் நீர் வருகிறது.. தலையைக் கோதி விட்டபடி, கண்ணிரைத் துடைத்துக் கொண்டே..) ஏய் சிம்பு.. நீ ரெண்டு வயசுல பொம்மை கேட்ட. வாங்கித்தந்தேன். பத்து வயசுல படத்துக்குப் போக காசு கேட்ட. குடுத்தேன். ஆனா... ஆனா இப்ப இந்த அப்பாவுக்கு ஒரு காபி கேட்டா...
(`யோவ்..’ என்றபடி சிம்பு வர.. ஓடுகிறார்)
விஜயகாந்த்:
”ஏஏஏஏஏய்ய்! ஒரு காபி குடு”
”அடுப்புல சாப்பாடும், சாம்பாரும் வேகுதுங்க”
“இன்னொரு கேஸ்ல, இன்னொரு அடுப்புல பத்தவெச்சு போடு”
“ஒரு கேஸ்தான் இருக்கு”
“தமிழ்நாட்டுக்கு ஒரு வீட்டுக்கு ரெண்டு சிலிண்டர் தரணும்ன்னு எந்த அரசியல்வாதியாவது நெனச்சானா? ஒரு மனுஷன் ஒரு நாளைக்கு மூணு காபி குடிக்கணும். வருஷத்துக்கு 1095 காபி. ஒருத்தன் சராசரியா 60 வருஷம் உயிரோட இருப்பான்னு வெச்சுகிட்டாலும் மொத்தம் 65700 காபி குடிக்கணும்ன்னா எத்தனை சிலிண்டர் வேணும்? ஒரு சிலிண்டருக்கு 100 காபி-ன்னாலும் 657 சிலிண்டர் வேணும்.. அப்படீன்னா”
(திரும்பினால் அவரது மனைவி, வேலைக்காரர்களெல்லாம் மீட்டை முடிச்சோடு மதுரைக்கு ஓடுகிறார்கள்)
ரஜினிகாந்த்:
ரஜினி: ”ஜில்லு.. காபி..காபி”
லதா: ”முடியாதுங்க“
“ஏன்..ஏன்..ஏன்?”
“அடுப்புல சாப்பாடு, சாம்பார் வேகுது”
விரலைச் சுழற்றுகிறார்... “நான் ஒரு சிலிண்டர் வாங்கினா...”
“ஒரு சிலிண்டர்தான். நூறு சிலிண்டர் எல்லாம் ஆகாது.”
”ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ்ஹாஆஆ” ஸடைலாகச் சிரிக்கிறார்.
க்யூவுல நின்னு சாவுங்க!
சமீபத்தில், (1999-ல்) பழனிக்குச் சென்றிருந்த போது விஞ்ச்சில் செல்ல ஒரு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட க்யூவில் நிற்க வேண்டிவந்தது. அப்போது க்யூவில் ஒருத்தர் “க்யூவுல நிக்கவெச்சு சாகடிக்கறாங்க” என்று புலம்பினார். உடனே வீறுகொண்டு எழுந்த எனது கற்பனைக் குதிரை சிந்தித்தது.
ஒரு வேளை சாவதற்கு க்யூவில் நிற்க வேண்டுமென்றால் எப்படியிருக்கும் என்று. உடனே (அங்க க்யூவுல நின்னு அல்ல.. வீட்டுக்கு வந்து..) அதை எழுதி எல்லா பிரபல பத்திரிகைகளுக்கும் மாறி மாறி அனுப்பினேன். ”போடா... நீயுமாச்சு.. உன் கற்பனையுமாச்சு” என்று எல்லோராலும் நிகாரிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக என்னிடமே அது பாசத்தோடு வந்து சேர்ந்தது.
இந்த வலையெழுத ஆரம்பித்த பிறகு (நான்: இதையே இன்னும் எத்தினி நாள்தான் சொல்லுவ? இப்போ நீயும் ஓரளவு சீனியர்டா. மனசாட்சி: ஏய்ய்ய்ய்..அடங்கு!) அந்தப் பிரதியை வீடு முழுவதும் தேடிவிட்டேன். கிடைக்கவே இல்லை! (நல்லவேளை!) விட்டுவிடுவோமா? ஏதோ கொஞ்சம் மனதிலிருப்பதை மறுபடி எழுத்தில் வடிக்கிறேன். (ஏண்டா.. ஒரு பதிவுக்கே இவ்ளோ பெரிய முன்னுரை! உன் எழுத்தையெல்லாம் புத்தகமா வெளியிட்டா, அதோட முன்னுரைக்கே இன்னொரு புத்தகம் இணைப்பா குடுக்கணும் போலிருக்கே!)
-------------------------------
ஊட்டி.
தற்கொலை முனைக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும் கல்லா (COUNTER) ஒன்றின் முன் மிக நீண்ட க்யூ. எல்லாரும் தற்கொலை செய்து கொள்ள, டிக்கெட்டுக்காக க்யூவில் காத்திருக்கிறார்கள். இன்னும் டிக்கெட் கல்லா திறக்கப்படவில்லை. க்யூவில் நிற்பவர்களிடமிருந்து பல சலசலப்புகள்...
“இவனுங்ககூட இதே எழவாப் போச்சு. சரியான நேரத்துக்கு வந்து தொறந்து தொலைய மாட்டீங்கறானுங்க”
”அவனுங்க தொறந்தா போதும், நாமதான் தொலையணும்!”
“யாரு.. சண்முகனா.. யோவ் நீ எங்கய்யா இங்க? நேத்துவரைக்கும் நல்லாத்தானே இருந்த? ஏன், உங்க கல்யாணத்துக்கு நீ காதலிக்கற அந்தப் பொண்ணு வீட்ல சம்மதிக்கலியா?”
“அவங்க வீட்ல சம்மதிச்சுட்டாங்க.. அவதான் கல்யாணத்துக்கு சம்மதிக்கல. ஆமா உனக்கென்னாச்சு?”
“அத ஏன் கேக்கற! என் லவ்வருக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!”
“உன் லவ்வர்.. அந்த கிழக்கு வீதி புவனாதானே?”
இந்தப் பெயரைக் கேட்டதும் பின்னாலிருந்து ஒரு குரல்..
“அவளை நிச்சயம் பண்ணினத நெனச்சிதான் நானும் இந்தக் க்யூவில நின்னுட்டிருக்கேன்!”
“அடப்பாவி.. அப்போ அவ ஃப்ரீதானா.. நான் உடனே கிளம்பறேன்” என்றபடி முதலாமவன் கிளம்புகிறான்.
இப்போது கல்லாவில் டிக்கெட் கொடுக்கும் பையன் வருகிறான்.
”ஏம்ப்பா, இவ்ளோ லேட்டு?”
”எமகண்டம் ஆரம்பிக்காம குடுக்கக்கூடாதுன்னு எங்க ஓனர் சொல்லிருக்காரு” என்று சொன்னபடி அங்கிருக்கும் புகைப்படமொன்றுக்கு மாலையணிவித்து மரியாதை செய்கிறான்.
“யாருப்பா அந்த ஃபோட்டோல இருக்கறது?”
“அதுதான் எங்க ஓனர்!”
“ஓனர் உயிரோட இல்லையா?”
“மொத டிக்கெட்டே அவருக்குத்தானே கொடுத்தேன்”
”அடப்பாவி” என்று வருத்தப்பட, கல்லா ஆசாமி டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கிறான்.
”டிக்கெட் எவ்வளவுப்பா?”
“ஒண்ணு ஏழரை ரூவா”
“ஏழரையா? சரிதான்.. கம்மி பண்ண மாட்டீங்களா?”
“குடும்பத்தோட வாங்கினா 50% தள்ளுபடி உண்டு”
“50% தள்ளுபடியா?”
“ஆமா.. 50% மட்டும் வாங்கீட்டு, நாங்களே தள்ளிவிட்டுடுவோம்”
“ஓ! அதுதான் `தள்ளு’படியா?.. சரி ஒரு டிக்கெட் குடு” என்றபடி 50 ரூபாய் நோட்டை நீட்டுகிறான்.
”யோவ்.. சாவுகிராக்கி. மொதல்லயே ஏன்யா இப்படி எழவெடுக்கற? சில்லறை குடுக்கறதுக்கென்ன?”
”இந்தமாதிரி நாட்டுல நடக்கற சில்லறைப் பிரச்சினைக்காகத்தான் நான் தற்கொலை முடிவே எடுத்தேன். மரியாதையா பாக்கி குடு”
“சரி.. இந்தா”
“என்ன 50 காசு குறையுது?”
“வரும்போது வாங்கிக்கயேன்”
“எங்க வரும்போது? நீ மேல வரும்போதா?”
“அட.. இவன் வேற.. இந்தா 50 காசுக்கு பதிலா சாக்லேட்”
“எந்த நேரத்துல சாக்லேட் குடுக்கறான் பாரு” சலித்துக் கொண்டபடி அவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு போக, தற்கொலை முனைக்கருகே சில பிச்சைக்காரர்கள்..
“ஐயா.. சாமீ.. இருக்கறதெல்லாம் போட்டுட்டு போயிடுங்கய்யா”
அவன் யோசித்துவிட்டு, இருக்கும் காசையெல்லாம் போடுகிறான்.
”ஐயா.. சட்டை பேண்டையும் கழட்டிக் குடுத்துட்டுப் போங்கய்யா”
போங்கடா.. திடீன்னு புன்னைகை மன்னன் கமலஹாசன் மாதிரி பொழச்சுட்டேன்னா? ***யோடயேவா வர முடியும்?”
"என்ன சொல்றீகன்னு தெரியலயே சாமி?”
“திடீர்ன்னு உயிர் பிழைச்சுட்டேன்னா ஜட்டியோடயேவா வரமுடியும்ன்னு கேட்டேன்” (எல்லாம் தமிழ்மண பயம்தான்!)
கொஞ்சம் தள்ளி கையில் பேக்குடன் நிற்கும் ஒருவர்....
“நம்ம கிட்ட ஒரு இன்ஷ்யூரன்ஸ் போடுங்க. ஒருவேளை நீங்க பொழச்சுட்டாலும், உங்க உயிரை எடுக்க ஆகற செலவை எங்க கம்பெனி ஏத்துக்கும்”
“உயிர வாங்காமப் போறியா?”
அப்போது தூரத்தில் ஒரு பெண்....
“சண்முகம்.. ஐ லவ் யூ! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கறேன்” என்று கத்தியபடி ஓடிவருகிறாள்.
உடனே சந்தோஷமடைந்த சண்முகம் அவளை நோக்கிப் போக, க்யூவில் நின்றிருந்த சிலர்..
“டிக்கெட்டை என்கிட்ட குடுத்துட்டுப் போங்க சார்” என்றபடி அவனைச் சூழ்கின்றனர்.
“யோவ்.. தள்ளுங்கய்யா.. இந்த டிக்கெட்டை தூக்கி எறியறேன்.. யாருக்குக் கிடைக்குதோ அவங்க எடுத்துக்கங்க” என்றபடி வீசுகிறான். அந்த டிக்கெட் தற்கொலைப் பள்ளத்தாக்கை நோக்கிப் பறக்க அங்கிருந்த செக்யூரிட்டிகள் கூட்டத்தை ”டிக்கெட் இருந்தா மட்டும் இந்தப் பக்கம் வாங்க” என்று விரட்டுகின்றனர். கூட்டம் மறுபடி வந்து க்யூவில் நிற்கிறது. அதிலிருந்த ஒருத்தர் கேட்கிறார்..
“அதெப்படி அவன் மட்டும் டிக்கெட் வாங்கீட்டு சாகாமப் போறான்? உங்க ரூல்ஸ்படி டிக்கெட்
வாங்கினா திரும்பப் போகக்கூடதில்ல?”
கல்லா ஆசாமி சொல்கிறான்...
“கல்யாணம் பண்ணிக்கறேன்னு போறவங்களை நாங்க விட்டுட்டுவோம். ஏன்னா ரெண்டும் ஒண்ணுதானே!”
----------------------------------------
டிஸ்கி: உமாகிட்ட இதைக் காட்டும்போது முடிவு வேற மாதிரி, பதிவுல போடும்போது வேற மாதிரி! எப்படி? நாங்கல்லாம் யாரு!
Labels: Queue , க்யூ , நகைச்சுவை , நீண்டவரிசை , நையாண்டி
இவனையெல்லாம் எதைக்கொண்டு அடிக்க?
இந்தப் பதிவப் படிச்சு, உங்களுக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா, நம்மளைக் குத்தம் சொல்லாதீங்க! என் ‘பிரதர்’ சுப்பிரமணிதான் நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னால ‘உங்கள் ஜூனியர்’ மாத இதழ்ல ‘எடிட்டரா? எறும்பா?’-ங்கற தலைப்புல எழுதியிருந்த இந்தப் படைப்பை (ஏண்டா, என்னா தெகிரியம் இருந்துச்சுன்னா, இதையெல்லாம் ‘படைப்பு’ ன்னு சொல்லுவ?) கொண்டு வந்து கொடுத்து, Blog-ல போடுங்கன்னான்.. இதையெல்லாம் ஒருத்தன் பத்ததிரமா வெச்சுட்டிருந்திருக்கான் பாரு.. அவனச் சொல்லணும்!
------------------------------------------------------------------------------------------------
[பரபரப்பான விஷயங்களையே எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நிருபரின் பார்வையில் சாதாரண நிகழ்ச்சி பரபரப்பாய்ப் பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்த போது..]
ஆசிரியரின் துணிச்சல்
ஆளுங்கட்சியினரின் தவறுகள் யாராலும் கண்டு கொள்ளப்படாமலிருந்த போது துணிந்து எழுதிய ஒரே இதழ் நமது இதழ். முதல்வர் ‘பாவக்காய் பாலகுருநாதன்’ செய்யும் கொலை, கொள்ளை, ஊழல்கள் என்று சாதாரண சம்பவங்களையே மற்ற பத்திரிகைகள் வெளியிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நமது ஆசிரியர் வெ.பூ.வாசுதேவன் மட்டுமே அவரது வண்டாவாளங்களை தண்டவாளத்திலேற்றினார். போன மாத இதழில் நமது ஆசிரியர் எழுதிய ‘முதல்வர் ஒரே சட்டை வேட்டியை இரண்டு நாட்களாகப் போட்டுக்கொண்ட மர்மம் என்ன?" - கட்டுரையைக் கண்டே முதல்வர் கதி கலங்கியுள்ளார். மேலும் வியாழனன்று நடந்த மாநாட்டில் முதல்வர் சட்டையின் மூன்றாவது பட்டனை, நான்காவது பட்டனுக்குரிய துளையில் தவறாகப் பொருத்திய போது-நமது புகைப்படக்காரர் ‘வெண்டைக்காய் வேணுகோபால்’ எடுத்த புகைப்படத்துடன் சென்ற இதழில் அசாதாரணத் துணிச்சலுடன் நமது ஆசிரியர் கவர் ஸ்டோரி எழுதியிருந்தார். (தலைப்பு ‘துளை மாறிய பட்டன்’ என்பதும் நினைவிருக்கலாம்)
இதையறிந்த முதல்வர் நமது ஆசிரியரை அழைத்து "பத்திரிகைகளுக்கென்றுதான் நான் எவ்வளவோ கொலை, கொள்ளை ஊழல்கள் செய்துகொண்டிருக்கிறேனே.. அதையெல்லாம் விடுத்து இவ்விஷயத்தை ஏன் எழுதினீர்?" என்று ஏசியுள்ளார். கவர்னர் ‘கத்திரி கனகவேலன்’ பேனாவை மூடாமல் பாக்கெட்டில் வைத்ததையே தைரியமாய் வெளியிட்டவராயிற்றே நமது ஆசிரியர்! இதற்கா அஞ்சுவார்? முடிந்ததை செய்யுங்கள் என்று வீரமாய்ப் பேசிவிட்டு வந்துவிட்டார்.
முதல்வர் சதி
சபதம்
இந்த எதிர்பாராத விபத்தால் ஜப்பானின் ‘முஹியாகோமான்ஷா’ ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள நமது ஆசிரியர், முதல்வர் மீது இந்தக் குற்றச்சாட்டை கூறியபோது, முதல்வர் அவ்வெறும்பை தான் அனுப்பவில்லை எனவும் இது வெளிநாட்டு சதி என்றும் கூறினாராம். இதை ஏற்காத நமது ஆசிரியர் ‘இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு முதல்வர் ராஜினாமா செய்யும் வரை நான் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சாப்பிடுவேன்’ என்று சபதமெடுத்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------
(எல்லாம் சரி, ‘இந்தப் பதிவுக்கும் நீங்க வெச்ச தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?’ -ன்னுதானே யோசிக்கறீங்க? இந்தப்பதிவ படிச்சுட்டு நீங்க என்னைப் பத்தி நினைக்கறதத்தான் தலைப்பா வெச்சேன்!)
Labels: நகைச்சுவை , நையாண்டி , மொக்கை , மொக்கையோ மொக்கை
விபரீத முடிவு!
இந்தப் பதிவு நம்ம தல லக்கிலுக் அவர்களுக்கு சமர்ப்பணம்!
அவன் இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பான் என்று யாருமே எதிபார்க்கவில்லை. மனைவி, மகள்கள் எல்லாரும் அவனது நண்பர்களுக்கு போன் போட்டு, உதவி கேட்டு வருத்தப் பட்டுக்கொண்டிருந்தார்கள். அவனது பெற்றோருக்கு கூப்பிட்டு மனைவி சொன்ன போது பொரிந்து தள்ளிவிட்டார் அவன் தந்தை..
"ப்ளஸ் டூ-வுல பெயில் ஆனப்போ அவன் தூக்குல தொங்கப் போனான்.. அப்போ கூட நான் இந்த அளவுக்கு வருத்தப்படல.. எப்போ இப்படி ஒரு முடிவை எடுத்தானோ, இனிமே அவன என் மகன்-ன்னு எப்படி சொல்லிக்கறது?" என்று மிகவும் ஆதங்கப்பட்டார்.
மனைவி வேறு வழியில்லாமல் அவன் உற்ற நண்பன் செந்திலுக்கு போன் பண்ணி, விஷயத்தை சொன்ன போது அவனால் நம்ப முடியவில்லை..
"அவன் எப்படி இப்படி ஒரு முடிவை துணிஞ்சு எடுத்தான்-ன்னு தெரியலையே.. நீ கவலைப் படாதம்மா.. நான் இப்பவே அவன்கிட்ட பேசறேன்"
அவனை அழைத்துகேட்டபோது அவன் யார் பேச்சையும் கேட்கும் மன நிலையில் இல்லை என்பது தெரிந்தது..
"என் மனச மாத்த முயற்சி பண்ணாதே செந்தில்.. யார் என்ன சொன்னாலும் நான் எடுத்த முடிவுல மாற்றம் இருக்காது.."
"இல்லடா .. ஏற்கனவே இதுனால எத்தனையோ பேர் பாதிக்கப் பட்டு இன்னும் மீள முடியல.. இப்போ"
"போனை வை செந்தில்.. என்ன ஆனாலும் நான் பின் வாங்கப்போறதில்லை" சொன்ன படியே நுழைந்தான் "குருவி" படம் போட்டிருந்த தியேட்டருக்குள்!
சினிமா.. சினிமா..!
எனது ரொம்ப பழைய நோட் ஒன்றில் எழுதி வைத்திருந்தது இது.. இப்பொது ஏதாவது மாற்றமிருக்கிறதா அல்லது ஏதாவது சேர்ந்திருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:-
- சோகமான செய்தியை கேட்கும் கதாபாத்திரம், கண்டிப்பாக கையில் ஏதாவது வைத்திருந்து, செய்தி கேட்டதும் அதை கீழே போட்டு விடுவது..
- டேபிள் ட்ராயரில் அவசரமாக எதையாவது தேடும்போது, ட்ராயர் முழுவதையும் கலை, கலை என்று கலைத்துவிடுவது..
- கைதி, ஹீரோவாகவோ, முக்கிய நடிகராகவோ இருந்தால் கண்டிப்பாக FANCY NUMBER தான்!
- வக்கீல் கக்கூஸூக்கு போனாலும் கருப்பு கோட்டோடுதான் போவார்!(அதேபோல அதிகபட்ச படங்களில் வக்கீல்கள் வில்லன்களோடுதான் இருக்கிறார்!)
- எதிர்முனையில் ஃபோன் வைக்கப்பட்டாலும், திரையில் இருக்கும் கதாபாத்திரம் ரிசீவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வைப்பார்.
- எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு உடை ஜிப்பாதான்.
- அதேபோல.. டீச்சருக்கு - கண்ணாடி + குடை / கலெக்டர் - கண்ணாடி மட்டும்.
- டாக்டர் சோகமான செய்தி சொல்லும் போது, மறக்காமல் கண்ணாடியை கழட்டுவார்.
- பெரும்பாலான கதாபாத்திரங்கள் வண்டியை நிறுத்தும் போது சடன் பிரேக் போட்டுத்தான் நிறுத்துவார்கள்.
நீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும்
ரொம்ப நாளைக்கு பிறகு அந்தப் பையனைப் பார்த்தேன்.. எனது பழைய நெருங்கிய நண்பரின் தம்பி.. எப்போது நண்பரை பார்க்க செல்லும்போதும் அவனாக வந்து சந்தேகங்கள் கேட்பான்.. அறிவு தாகம் மிக்கவன்! நான் ஊரை விட்டு சென்னைக்கு வந்து நான்கைந்து வருடங்களாகிவிட்டன.. இவனைப் பார்த்ததும்கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருந்தது.. படித்து முடித்து இங்கே வேலைக்கு சேர்ந்திருப்பான் போல..
"அண்ணா.. எப்படி இருக்கீங்க?" - சிரித்த முகத்துடன் வந்தான்..
"டேய்.. செந்தில் .. எப்படிடா இருக்க?.. சென்னைலயா இருக்க நீ?"
"இல்லைண்ணா.. மாமா வீட்டுக்கு வந்தேன்.. நீங்க எப்படி இருக்கிங்க அண்ணா?
"நல்லா இருக்கேண்டா.. சரவணன் எப்படி இருக்கான்.. எங்க இருக்கான்?"
"நல்லா இருக்காரு.. புனா-ல இருக்காரு.. நாந்தான் கஷ்டப்படறேன்.."
அடடா.. என்ன ஒரு கொடுமை இது! என்ன கஷ்டம் இவனுக்கு.. கண்டிப்பாக நாம் உதவ வேண்டும் என்று நினைத்தபடியே.. "என்னாச்சுடா?" என்று கேட்டேன்..
"காசு சேரவே மாட்டிங்குது. உங்களைத்தான் ஐடியா கேட்கணும்.."
ஆஹா.. சிக்கீண்டாண்டா ஒருத்தன் என்று இருந்தது எனக்கு.. நான் அப்போதுதான் சேமிப்பு குறித்த சில புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தேன்..
"இந்தா. எழுதிக்கோ" என்று அந்த புத்தகங்களின் பெயரையெல்லாம் வரிசையாக சொன்னேன்.. என்னிடம் விடை பெற்று சென்றான் அவன்..
அதன் பிறகு இரண்டு வாரம் கழித்து போன் வந்தது..
"என்னடா.. காசு சேர ஆரம்பிச்சாச்சா?"
"இல்லண்ணா.. அந்த புக் எல்லாம் வாங்கினதுல ஐநூறு ரூபா கடன்தான் ஆச்சு.."
ஆஹா.. இப்படி ஆகிப் போச்சே.. நான் மனம் தளராமல்..
"குபேரன் சிலை வாங்கி வைடா .. பணம் சேரும்.."
மறுபடி அடுத்த வாரமே கூப்பிட்டுவிட்டான்.. ஒன்றும் மாற்றமில்லையாம்.. இது என்னடா
சோதனை என்று நினைத்தவாறே.. மணி பிளான்ட் செடி வளர்த்து பார்க்க சொன்னேன்..
இந்தமுறை இரண்டே நாளில் போன் வந்தது.. ஓஹோ.. கொஞ்சம் பலன் இருக்கும் போல அதுதான் உடனே போன் என்று நினைத்தபடி போனை எடுத்தேன்..
"அண்ணா.. இன்னும் வேற எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கண்ணா.. ரெண்டு ஐடியா பண்ணினா ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு பலன் தரும் இல்லையா?"
ஆகா.. அச்சடா.. நாம எட்டு அடி பாஞ்சா இந்த காலத்து பசங்க பதினாறு அடி பாயறான்களே-என்று புளகாங்கிதம் அடைந்தவாறே..
"சரி.. மீன் தொட்டி வாங்கிவை.. சில மீன் சொல்றேன்.. அதெல்லாம் வாங்கி வளர்த்து பாரு.. மொதல்ல மீன் தொட்டியும் மத்த ஐட்டம் எல்லாம் வாங்கு.. என்ன என்ன மீன் வாங்கணும்-னு நாளைக்கு சொல்லறேன்.. அதுக்கு சில புக்ஸ் இருக்கு.. இன்னைக்கு நைட் பாத்துட்டு நாளைக்குள்ள சொல்றேன்" - நம்மகிட்டயும் ஐடியா கேட்க பூமில ஒரு ஜீவன் இருக்கு என்கிற சந்தோஷம் தாங்கவில்லை எனக்கு! அந்த சந்தோஷம் இரண்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை..! சரியாக இரண்டு மணி நேரத்தில் போன் வந்தது.. அவன்தான் என்று சந்தோஷமாக எடுத்த எனக்கு அதிர்ச்சி..
அவன் அப்பா பேசினார்..
"அப்பா.. கிருஷ்ணா பேசறேன்.. நல்லா இருக்கீங்களா?" என்று பாசமாக ஆரம்பித்தேன்..
"எல்லாம் இருக்கட்டும்பா.. நீதான் இவனுக்கு இந்த ஐடியா எல்லாம் சொல்லறதா?"
"ஆமாம்பா.. இந்த மாதிரி பண்ணினா பலன் இருக்கும்-னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க. ஆனா உங்க பையன் ராசிக்கு எந்த முறை அவனுக்கு பலன் தரும்-னு நாம் வெயிட் பண்ணிதான் பாக்கணும்.." சுவாரசியமாக சொல்லிக்கொண்டே வந்தவனை இடைமறித்தார் அவர்..
"கொஞ்சம் நில்லுப்பா..நீயும் உன் நாசமாப் போற ஐடியா-வும் " குரல் கடுமையாக இருந்தது..
"இதுவரைக்கும் நீ சொன்ன ஐடியா-வால ரெண்டாயிரம், மூவாயிரம் கடன் பண்ணிட்டு வந்திருக்கான் அவன்.."
"இல்லங்க.. அது வந்து.."
"யோவ்.. எல்லா ஐடியாவும் சொன்ன நீ.. ஒரு ஐடியா சொல்லி இருக்கனுமில்ல?"
"என்ன ஐடியா-ங்க?"
"ஆங்? அவன வேலைக்கு போக சொல்லி இருக்கனுமா வேண்டாமா?"
எனக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.. அவன் வேலைக்கே போறதில்லையா.. அடடா.. அத கேட்காமல் விட்டுட்டோமே.. அதன் பிறகு பத்து, பதினைந்து நிமிடத்திற்கு அவர் திட்டியதை எழுத முடியாது..
அதற்குப் பிறகு அவன் ஊரிலிருந்து எந்த போன் வந்தாலும் எடுக்கவே பயமாய் இருக்கிறது!
விருந்தும் மருந்தும்
விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க..
அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் விருந்துல எவ்ளோ மாற்றங்கள்..? ஒரு கற்பனை..
1960 - விருந்தாளிக்கு கடிதத்தில் .. "எப்போது வருவீர்கள்? உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. "
1970 - வந்த விருந்தாளி போகும்போது.. "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.."
1980 - "கிளம்பியாச்சா?.. சரி., போய்ட்டு லெட்டர் போடுங்க.."
1990 - "போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க.."
2000 - "எப்போ ஊருக்கு போறிங்க? டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்.. அதான் கேட்டேன்.."
2010 - "நாளைக்கு காலைல இன்டர்சிட்டி -ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தாங்க டிக்கெட்"
2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷன் -ஆ? எங்க வீட்ல விருந்தாளிக ரெண்டு வாரமா தங்கி இருக்காங்க.. போற மாதிரி தெரியல.. வந்து நடவடிக்கை எடுங்க.."
2030 - "ஹலோ.. ஆமா., நாந்தான் பேசறேன்.. மொத்தம் மூணு பேர்.. கிட்டத்தட்ட மூணு வாரமாச்சு.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளில போய்ட்டு வரப்போ முடிச்சிடுங்க.. அட்வான்ஸ் மாயாண்டிகிட்ட குடுத்தாச்சு.. மீதி காரியம் முடிஞ்சதும் தரேன்.."


