
அரசியல்வாதி மறைமுகமாய்
துரோகம் செய்கையில்
அவசரமென்று வாங்கிய
பெருந்தொகையை
நண்பன்
திருப்பியே
தராது போகையில்
பஞ்சாயத்து ஆபிஸில்
ரேஷன் கடைகளிலென
பலவிடங்களில்
பலவகைகளில்
ஏமாற்றப்படுகையிலெல்லாம்
ஓடி ஒளிகிற கோபம் ...
பாக்கி காசை
கண்டக்டர் தராதபோதும்
சர்வர் தோசை கொணர
தாமதமாகும்போதும்தான்
வெளிப்பட்டுத் தொலைக்கிறது..
3 அலசல்கள்...:
I cant read this page :( font problem
நல்ல சிந்தனை. ஆனா எனக்கு இந்த மாதிரி சர்வர்கள் மேல கோவப்படறவங்கள பார்த்தா தான் கோவம் வரும். ஒரு சர்வர் கிட்ட அவங்க தெனாவட்டு, வீரம், பந்தா, யார் கிட்டயோ போட்ட சண்டை எல்லாத்தையும் சேர்த்து காட்டுவாங்க.
அதான் நான் சொல்லிருக்கேனே சத்யா, சர்வர்கள் கிட்ட சண்டை போடறவங்க.. வேற வழியில்லாத கோழைகள் என்று!
Post a Comment