விருந்தும் மருந்தும்

Friday, 16 May, 2008 ·

விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க..

அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் விருந்துல எவ்ளோ மாற்றங்கள்..? ஒரு கற்பனை..

1960 - விருந்தாளிக்கு கடிதத்தில் .. "எப்போது வருவீர்கள்? உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. "

1970 - வந்த விருந்தாளி போகும்போது.. "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.."

1980 - "கிளம்பியாச்சா?.. சரி., போய்ட்டு லெட்டர் போடுங்க.."

1990 - "போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க.."

2000 - "எப்போ ஊருக்கு போறிங்க? டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்.. அதான் கேட்டேன்.."

2010 - "நாளைக்கு காலைல இன்டர்சிட்டி -ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தாங்க டிக்கெட்"

2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷன் -ஆ? எங்க வீட்ல விருந்தாளிக ரெண்டு வாரமா தங்கி இருக்காங்க.. போற மாதிரி தெரியல.. வந்து நடவடிக்கை எடுங்க.."

2030 - "ஹலோ.. ஆமா., நாந்தான் பேசறேன்.. மொத்தம் மூணு பேர்.. கிட்டத்தட்ட மூணு வாரமாச்சு.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளில போய்ட்டு வரப்போ முடிச்சிடுங்க.. அட்வான்ஸ் மாயாண்டிகிட்ட குடுத்தாச்சு.. மீதி காரியம் முடிஞ்சதும் தரேன்.."

9 அலசல்கள்...:

dxersguide said...
16 May, 2008 5:23 PM  

It's very nice to see your writings. Today KBR send a mail to regarding this. Hope you are well. Convey my regards to all.
Jaisakthivel,
Chennai
www.sarvadesavaanoli.blogspot.com

parisalkaaran said...
16 May, 2008 5:35 PM  

Hai JSV.. Its glad to receive a comment from one of my closest well wisher! Continue reading my blog and win exiting prizes!! (eppadiyellam samaalikka vendirukku!!)

களப்பிரர் said...
19 May, 2008 7:02 PM  

//2010 - "நாளைக்கு காலைல இன்டர்சிட்டி -ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தாங்க டிக்கெட்"

2020 - "ஹலோ போலீஸ் ஸ்டேஷன் -ஆ? எங்க வீட்ல விருந்தாளிக ரெண்டு வாரமா தங்கி இருக்காங்க.. போற மாதிரி தெரியல.. வந்து நடவடிக்கை எடுங்க.."

2030 - "ஹலோ.. ஆமா., நாந்தான் பேசறேன்.. மொத்தம் மூணு பேர்.. கிட்டத்தட்ட மூணு வாரமாச்சு.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளில போய்ட்டு வரப்போ முடிச்சிடுங்க.. அட்வான்ஸ் மாயாண்டிகிட்ட குடுத்தாச்சு.. மீதி காரியம் முடிஞ்சதும் தரேன்.." //

போப்பா .... இதுக்கெல்லாம் இம்புட்டு வருடம் கத்திட்டு இருக்க முடியாது..

parisalkaaran said...
19 May, 2008 7:15 PM  

அடப்பாவிகளா
இப்போவே பண்ண ஆரம்பிச்சுடுவாங்க போல!
நானில்ல சாமி!

ரவிசங்கர் said...
19 May, 2008 8:23 PM  

:)

ரொம்ப நொந்து போய் இருக்கீங்களா :) ..ரசிச்சுப் படிச்சேன்

parisalkaaran said...
20 May, 2008 11:02 AM  

மிக மிக சந்தோஷமாக உள்ளது.. என் பக்கங்கள் உங்களால் படிக்கப்பட்டிருப்பதை அறிந்து.. ! பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல!

கிருத்திகா said...
18 October, 2008 11:16 AM  

தீபாவளி சமயத்தில தலைதீபாவளி மாப்பிள்ளை ஜோக் போடறமாதிரி இருக்கு... ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள். உங்க வீட்டுக்கு வர விருந்தாளில யாரும் வலைப்பதிவு படிக்கமாட்டோங்களோ...

புதுகைத் தென்றல் said...
19 October, 2008 9:25 PM  

விருந்தும் மருந்தும் 3 நாளைக்குன்னு சொல்வாங்க.

இந்த 3 நாளா வந்திருந்த என்னைப் படுத்தின பாட்டை எனன்னு சொல்வேன்?

மெயிலைப்பார்த்தா உங்க பதிவு.

ரொம்பவே நொந்து போயிட்டேன்.

:( நானும் ஒரு பதிவு போடறேன்

மங்களூர் சிவா said...
21 October, 2008 10:25 AM  

பரிசல் மாயாண்டி அட்ரஸ் கொஞ்சம் குடுங்களேன்

:))))))))))))))))))

தொடர்புக்கு

kbkk007@gmail.com

வெளம்பரம்...

தமிழ் வலையுலக வரலாற்றில் 350 ஃபாலோயரைத் தொட்ட முதல் தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள்... (அடிங்......!)

என்னைத் தொடரும் நண்பர்கள்

இதுக்கும் முன்னாடி..

உங்கள் வரவே வரமாய்...

Provided by accredited online degrees website.

எல்லாமே ஒரு விளம்பரந்தேன்!!